Sitemap

ஏறுமுகம் காணும் பிட்காயின் விவகாரம் (முதல் பகுதி)

ஆதியாகமம் மற்றும் பணத்தின் தோற்றம்

3 min readApr 12, 2018

--

2017 ஆம் ஆண்டில் பிட்காய்ன்களின் மதிப்பு உச்சத்தை எட்டிவிட்ட நிலையில் முதலீட்டாளர்களிடம் இது
குறித்து சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. மாறாக அரசாங்க ஆதரவு எதுவும் இல்லாமல்
சொத்தினை டிஜிட்டல் முறையில் இப்படி முதலீடு செய்வது வேடிக்கையாக தெரியலாம். மேலும் பிட்
காய்ன்களின் மதிப்பு அதிகரிக்கும் போக்கு டுலிப் மானியா அல்லது Dot-Com Bubble உடன் ஒப்பிடத்
தூண்டுகிறது. பிட்காய்ன்களில் முதலீடு செய்வதில் பல குறிப்பிடத்தக்க ஆபத்துகள் இருந்தாலும், அதே
சமயம் சில மகத்தான வாய்ப்புகளும் இதில் அடங்கியுள்ளது என்பதை மறுக்கமுடியாது.

தொடக்கம்

உலக வரலாற்றில் தொலைதூரத்தில் இருக்கும் மக்களுக்கிடையே நம்பத்தகுந்த வங்கி அல்லது அரசாங்கம்
போன்ற அமைப்பு எதுவுமின்றி மதிப்பு மாற்றம் இதுபோல் நடந்தது கிடையாது. 2008ல் சடோஷி
நகமோடோ எனும் அடையாளத்தை வெளியிடாத நபர், கணினி அறிவியலில் நீண்ட நாள் பிரச்சனையாக
பார்க்கப்பட்டு வந்த Byzantine General’s சிக்கலுக்கு 9 பக்கங்கள் கொண்ட தீர்வினை வெளியிட்டார். இந்த
அடையாளம் தெரியாத நபர் தான் பிட்காய்ன்களை அறிமுகப்படுத்தினார். இதனால் உலகில் முதன்
முறையாக தொலைதூரத்திலிருக்கும் இருவருக்கிடையே மதிப்பு பரிமாற்றம் அதிவேகத்தில் நம்பிக்கையற்ற
வழியில் நடைபெற்றது. பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியலில் பிட் காய்ன்களின் உருவாக்கம்
என்பது மிகவும் ஆழ்ந்த சிந்தனையாகும். இப்படிப்பட்ட சிந்தனையை செயல்படுத்திய நகமோடோ ஒரே
சமயத்தில் பொருளாதாரத்தில் நோபல் பரிசு மற்றும் டூரிங் விருது இரண்டையும் பெறக்கூடிய
தகுதியுடையவர்.
ஒரு முதலீட்டாளருக்கு பிட்காய்ன்கள், பிட்காய்ன் நெட்வொர்க்குகளின் மூலம் 'மைனிங்' எனும்
செயல்முறையால் டிஜிட்டல் டோக்கன்களாக பரிமாற்றம் செய்யப்படுகிறது. வடிவமைப்பு மூலம், 21
மில்லியன் பிட்காய்ன்கள் மட்டுமே உள்ளது மற்றும் அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே உள்ளன -
எழுதும் நேரத்தில் சுமார் 16.8 மில்லியன் பிட்காய்ன்கள் ஏற்கனவே ‘மைன்’ செய்யப்பட்டது. ஒவ்வொரு
நான்கு வருடங்களுக்கும் மைனிங்ல் உற்பத்தி செய்யப்படும் பிட்காய்ன்கள் எண்ணிக்கை பாதியாகிறது.
மற்றும் புதிய பிட்காய்ன்கள் உற்பத்தி 2140 ஆம் ஆண்டளவில் முழுமையாக முடிவடையும்.

Press enter or click to view image in full size

அரசாங்கம் அல்லது ஏதாவது நிறுவனங்கள் அங்கீகரிக்கும் வரையில், பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு, பிட்காயின் ஏன் எந்த மதிப்பும் இல்லாமல் இருக்கிறது என்ற சந்தேகம் தொடர்ந்துகொண்டே இருக்கும். பங்குகள், பத்திரங்கள், ரியல் எஸ்டேட்கள் போன்றும், எண்ணை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் போன்றும் நிலையான பணப்பகுப்பாய்வு அல்லது உற்பத்தியை வைத்து பிட்காயினை மதிப்பீடு செய்ய முடியாது.
இவைகளைப்போல் அல்லாமல், பிட்காயின் ஒரு வித்தியாசமான வகையான நாணைய பொருட்களின் கீழ் வைக்கப்பட்டிருக்கிறது. அதன் மதிப்பீடு, சில கோட்பாடுகளுக்கு உட்பட்டு வகுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மற்ற முதலீட்டாளர்கள் எவ்வாறு பிட்காயினை மதிப்பு செய்துள்ளார்கள் என்பதை வைத்து ஓவ்வொரு முதலீட்டாளரும் அதன் மதிப்பை கணக்கிட முடியும். பணவியல் பொருட்களின் தத்துவார்த்த தன்மையை புரிந்துகொள்ள, முதலில் நாம் பணத்தின் தோற்றத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

பணத்தின் தோற்றம்

முந்தைய காலகட்டங்களில், பண்டமாற்று முறையில் மட்டுமே வணிகம் செய்யப்பட்டு வந்தது. சில நம்பமுடியாத குறைபாடுகள் காரணமாக, பண்டமாற்று முறைக்கான இடம் மற்றும் எல்லைகள் குறைந்தது. தேவைப்பிரச்சனைகளின் இயற்கையான தற்செயல், இருமடங்காக இருப்பது, பண்டமாற்று முறையின் பெரிய குறைபாடு ஆகும். உதாரணமாக, ஆப்பிள் விற்பனையாளர், ஒரு மீன் விற்பனையாளரிடம் வணிகம் செய்ய ஆசைப்பட்டால், அந்த சமயத்தில், மீன் விற்பனையாளருக்கு ஆப்பிள் தேவை இல்லாத பட்சத்தில், மீன் விற்பனையாளர் ஆப்பிளை வாங்கிக்கொள்ள மாட்டார். இதனால், வணிகம் நடக்காது.
அந்த காலத்து மனிதர்கள், கிடைப்பதற்கரிய ‘சேகரிப்பு பொருட்கள்’ ( யானை தந்தம், சிப்பி முதலியன) மீது அதிக நாட்டம் வைத்திருந்தனர். அந்த நாட்டமானது, மனிதர்களின் பரிணம வளர்ச்சியில் பெரும் நன்மையை ஏற்படுத்தியது என ‘பணத்தின் தோற்றம்’ என்ற அற்புதமான கட்டுரையில் நிக் சாபோ (Nick Szabo) தெரிவித்திருக்கிறார்.
இதுமாதிரியான பொருட்கள் பழங்குடியினருக்கும் மற்றவர்களுக்குமான வணிகத்தை ஏற்படுத்தியது. அதன்மூலம், அவர்களின் சந்ததியினரும் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. மேலும், இதுபோன்ற பொருட்களின் வணிகம் மற்றும் பரிமாற்றம், அக்காலகட்டத்தில், மிகவும் சொற்பமாகவே நடைபெற்றது. அவர்கள், அத்தகையான அரிய பொருட்களை, பரிமாற்றத்திற்கான பொருட்களாக பார்க்காமல் மதிப்பிற்கான பொருட்களாக மட்டுமே பார்த்தார்கள்

இக்காலத்து பணத்தை விட, அக்காலத்து பணத்திற்கு வேகம் குறைவாக இருந்தது; ஒரு மனிதனின் சராசரி வாழ்நாளில், மிகக்குறைந்த அளவிலேயே அதன் பரிமாற்றம் நடந்திருக்கும். ஆனால், நாம் பழங்கால பொருட்கள் என்று இப்பொழுது கூறும் பொருட்கள், பல காலங்கள் இருப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு பரிமாற்றத்தின் பொழுதும் அதன் மதிப்பு அதிகரித்துக்கொண்டே போகும் என சாபோ கூறுகிறார்.

ஒவ்வொரு மனிதனும், எந்த விதமான பழங்கால பொருட்களை சேகரிப்பது என்றும் எந்த மாதிரியான பழங்கால பொருட்களை உருவாக்குவது என்றும் அதிகம் யோசிக்கிறான். சேகரிக்கத்தக்க பொருட்களை சரியாக கணிப்பதன் மூலம், அந்த பொருளை அதிகமாக வணிகம் செய்ய முடிவது மட்டுமல்லாமல், அதிக பணத்தை ஈட்டவும் முடிகிறது. நாராகான்செட் (Narragansetts) என்று அழைக்கப்படும் அமெரிக்க பழங்குடியினர், வணிக லாபத்திற்காக மட்டும், தேவையற்ற சேகரிப்பு பொருட்களை தயாரிக்கின்றனர். சேகரிப்பு பொருட்களுக்கான பிற்கால தேவையை எதிர்பார்க்கும் திறமை இருந்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது, அத்தேவையின்போது, அதனை வைத்திருப்பவரிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ள முடிவது மட்டுமல்லாமல், அதன் உள்ளீட்டு மதிப்பை, மக்கள் எண்ணிக்கைக்கேற்ப அதிகரித்துக்கொள்ளலாம். இது, மொத்த சமூகத்தையும் ஒரே பொருள் மதிப்பிற்குள் கொண்டுவருகிறது. இதனை,“ நாஷ் சமநிலை”(Nash Equilibrium) என்று கூறுகின்றனர். வணிகம் மற்றும் தொழிலாளர்களின் வகைப்படுத்துதலை உருவாக்குவதால், நாஷ் சமநிலையை,உள்ளீட்டு மதிப்பிற்கு கொண்டுவருவது, சமூகத்திற்கு மிகப்பெரிய வரமாக அமையும். இது, நாகரீகமாதலையும் ஊக்குவிக்கும்.

Press enter or click to view image in full size

மனித குல வளர்ச்சி மற்றும் வணிகப்பாதைகள் அதிகரிப்பினால், ஒவ்வொரு சமூகத்தில் வைக்கப்படும் உள்ளீட்டு மதிப்பீடானது, பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இதனால், வணிகர்கள், அவர்கள் இருக்கும் இடத்து உள்ளீட்டு மதிப்பை வைத்து விற்பனை செய்வதா அல்லது அவர்கள் வணிகம் செய்யவிருக்கும் இடத்தின் உள்ளீட்டு மதிப்பை வைத்து விற்பனை செய்வதா என்ற குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். அன்னிய நாட்டு உள்ளீட்டு மதிப்பில் சேமிக்கும்பொழுது, அந்த வணிகம் முழுமையாக நடைபெறும். இது, அந்த வணிகருக்கு மட்டுமல்லாமல், அந்த சமூகத்திற்கு நன்மையாக அமையும். இரண்டு சமூகங்களும் ஒரே உள்ளீட்டு மதிப்பீட்டிற்குள் செல்லும்பொழுது, வணிக விலை குறையும் அபாயமும் ஏற்படுகிறது. வரலாற்றிலேயே, 19ம் நூற்றாண்டில் தான் உலகம் முழுவதும் ஒரே உள்ளீட்டு மதிப்பாக தங்கத்தை நோக்கி நகர்ந்தது. அப்பொழுது, பெரும் வர்த்தக வெடிப்பு ஏற்பட்டது. அந்த காலகட்டத்தை பற்றி, லார்ட் கெய்ன்ஸ் (Lord Keynes) கூறியதாவது..

சராசரி மனிதனுக்கு பொருளாதார முன்னேற்றத்தில் என்ன ஒரு அசாதாரண அத்தியாயம் … எந்தவொரு மனிதனுக்கும், நடுத்தர மற்றும் உயர் வகுப்புகளுக்குள்ளும், எந்தவொரு உயரத்திற்கும் மேலான திறனை குறைந்த விலையில், குறைந்தபட்ச சிக்கலில் வசதிகளை அடையமுடியும். லண்டனின் வசிப்பவர்கள், தொலைபேசி மூலம், பூமியில் உள்ள பல பொருட்களை, காலையிலும், அவரது வீட்டு வாசலிலும் தனது ஆரம்ப விநியோகத்தை நியாயமாக எதிர்பார்க்கலாம்

--

--

Vijay Boyapati
Vijay Boyapati

Written by Vijay Boyapati

Tu ne cede malis, sed contra audentior ito

Responses (2)